கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

வாராணசியைப் போல மதுரை விமான நிலையத்தில் பாலம் அமைக்கப்படும்: அமைச்சர்

வாராணசியைப் போல மதுரை விமான நிலையத்தில் பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

News image
மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு.
Updated On :27 ஜனவரி 2024, 5:49 pm

DIN

வாராணசியைப் போல மதுரை விமான நிலையத்தில் பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டம் குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளரிடம் கூறியது:

நீர் மேலாண்மையில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது என மத்திய ஜலசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம், குடிமராமத்துத் திட்டம் போன்ற திட்டங்களை தமிழக முதல்வர் செய்து வருகிறார்.

ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் அமைக்கும் பணியானது தமிழகத்தில் நடைபெற உள்ளது.

நீர் மேலாண்மையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக மழைநீர் சேகரிப்புத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது உள்ள குடிமராமத்துப் பணியால் வடகிழக்கு, தென் கிழக்கு பருவமழையின் நீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும்.

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிக்காக 90 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது.

1.5 கிலோ மீட்டர் முதல் 2 கி.மீ ஓடுதள விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது, ஓடுதள விரிவாக்கப் பணிகளில் இடையே திருமங்கலம் சுற்றுச்சாலை அமைந்துள்ளது. இதனால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இப்பகுதியில் வாராணசி விமான நிலையம் போல் பாலம் அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். 

கூடிய விரைவில் மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்க பணியானது தொடங்க உள்ளது. இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.