வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

8 மாதங்களுக்குப் பின் திரையரங்கில் எம்ஜிஆர் படம்: திருச்சியில் ரசிகர்கள் உற்சாகம்

திருச்சியில் குளிர்சாதன வசதியில்லாத திரையங்கில் 8 மாதங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை காலை திரையிடப்பட்ட எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

News image
8 மாதங்களுக்குப் பின் திரையரங்கில் எம்ஜிஆர் படம்: திருச்சியில் ரசிகர்கள் உற்சாகம்
Updated On :27 ஜனவரி 2024, 5:50 pm

DIN

திருச்சி: திருச்சியில் குளிர்சாதன வசதியில்லாத திரையங்கில் 8 மாதங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை காலை திரையிடப்பட்ட எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

Story image

கரோனா தொற்று பரவலைத் தடுக்க திரையரங்குகளை மூட மார்ச் மாதம் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 8 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டன. நவ.10ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதியளித்தன. இதையடுத்து, திரையரங்குகளை தயார்படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.

Story image


தயாரிப்பாளர்களின் அறிவிப்பால் புதுப்படங்கள் வெளியிடப்படவில்லை. 
இதனால், திருச்சி மாநகரில் பெரும்பாலான தியேட்டர்களில் செவ்வாய்க்கிழமை காலை காட்சி திரையிடப்படவில்லை. திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள பேலஸ் திரையரங்கத்தில் உரிமைக்குரல் திரையிடப்பட்டது.

Story image

3 நாள்களுக்கு இந்த படம் திரையிடப்படுகிறது. தீபாவளி முதல் தெலுங்கு ரீமேக் படம் (நந்து) திரையிடப்படவுள்ளது. 

Story image


இதேபோல, மாநகரில் 4 திரையரங்குகளில் செவ்வாய்க்கிழமை படங்கள் திரையிடப்பட்டன. ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் நின்று டிக்கெட் பெற்றனர். கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்பட்டது. இருக்கைகளில் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர். பேலஸ் திரையரங்க உரிமையாளர் சந்திரசேகர் கூறுகையில், திருச்சியில் 4 தியேட்டர்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு பழைய படங்கள் திரையிடப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.