அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கரோனா மருத்துவக்குழுவில் இடம்பெற்ற இந்திய மருத்துவர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கரோனா தடுப்பு குறித்து ஆலோசனை வழங்குவதற்கு ஜோ பைடன் அமைத்துள்ள குழுவில் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் விவேக்மூர்த்தி மற்றும் செலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனாவுக்கு எதிரான அமெரிக்காவின் பணிக்குழுவில் மருத்துவர் விவேக் மூர்த்தி மற்றும் செலின் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளனர். மருத்துவர் செலினுக்கு தமிழ் பாரம்பரியம் இருப்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், மருத்துவர்கள் இருவருக்கும் தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மருத்துவமனை இன்குபேட்டரில் தீ: பச்சிளம் குழந்தை காயம்

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் ரோந்து பணி தொடக்கம்!
மத்திய, மாநில அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு!

யாருடன் கூட்டணி?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

