குன்னூர் மலைப்பாதையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி
மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் சாலையைக் கடக்க முயன்ற 2 வயது புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.


மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் சாலையைக் கடக்க முயன்ற 2 வயது புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இங்கு காட்டுயானை, காட்டுப்பன்றி, காட்டெருமை, சிறுத்தை, புள்ளிமான், கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. மேலும் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே சாலை அமைந்துள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் சாலையின் அருகே நடமாடி வருவது வழக்கம்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு சாலையின் அருகே வனப்பகுதியில் இருந்து சாலையைக் கடக்க முயன்ற 2 வயதுடைய பெண் புள்ளிமான் மீது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியது.
இதில், படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது.
இதனை பார்த்த வாகன ஓட்டிகள் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்குச் சென்ற வனத் துறையினா் புள்ளிமான் உடலை கைப்பற்றி அடர்ந்த வனப்பகுதியில் குழிதோண்டி புதைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...