சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,225 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது.
மாநிலத்தில் புதிதாக 1,704 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 479 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 162 பேர் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.