விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வனுக்கு கரோனா தொற்று உறுதியானதை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்எல்ஏ எம். ஆர் முத்தமிழ்ச்செல்வனுக்கு கரோனா தோற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ள நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள அதிமுக நிர்வாகிகள் கரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவின்பேரில், எம்எல்ஏ முத்தமிழ்ச்செல்வன் வியாழக்கிழமை கரோனா பரிசோதனை செய்துள்ளார். அப்போது தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.