அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நிவர் புயல்: ஊத்தங்கரை பகுதியில் நெல் வயல்கள் சேதம்-விவசாயிகள் வேதனை

நிவர் புயலால் ஊத்தங்கரை அடுத்த வண்டிக்காரன் கொட்டாய் பகுதியில் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வருவாய் நஷ்டமடைந்துள்ளதாக  விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

News image
நிவர் புயலால் சேதமடைந்துள்ள நெல் வயல்கள்.
Updated On :26 நவம்பர் 2020, 6:08 am

DIN

நிவர் புயலால் ஊத்தங்கரை அடுத்த வண்டிக்காரன் கொட்டாய் பகுதியில் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வருவாய் நஷ்டமடைந்துள்ளதாக  விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள விவசாயிகள் நெல் நடவு செய்து கதிர் முற்றி இன்னும் இருபது நாள்களில் அறுவடை செய்ய உள்ள நிலையில் நிவர் புயல் காரணமாக அதிக அளவில் காற்று வீசியதால் வயல் வெளியில் இருந்த நெற்பயிர்கள் காற்றில் சாய்ந்து சேதமடைந்துள்ளது.

நெல் வயல்களில் நெற் பயிர்கள் சேதம் அடைந்து கிடப்பதை கண்டு விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழக அரசு வேளாண்துறை அதிகாரிகள் மூலம்  நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.