கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சேலத்தில் புயலால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

நிவர் புயலால் சேலத்தில் பலத்த காற்று வீசியதால் கன்னங்குறிச்சி பகுதியில் நெற்பயிர்கள் சரிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

News image

சேலம் கன்னங்குறிச்சி புது ஏரி பகுதியில் வியாழக்கிழமை வீசிய காற்றில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள்.

Updated On :26 நவம்பர் 2020, 8:37 am

DIN

நிவர் புயலால் சேலத்தில் பலத்த காற்று வீசியதால் கன்னங்குறிச்சி பகுதியில் நெற்பயிர்கள் சரிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

சென்னை மற்றும்  கடலூர், பாண்டிச்சேரி ஆகிய ஊர்களில் நிவர் புயல் தாக்கியதால் சேதம் ஏற்பட்டுள்ளது .

Story image


நிவர் புயலால் வியாழக்கிழமை சேலம் ஏற்காடு செல்லும் சாலையை சாரல் மழையில் மூடி மறைத்துள்ள மேகங்கள். 

இங்கு அதிகாரிகள் குழுவினர் சென்று மழை நீர் வடிய உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் .

நிவர் புயலால் சேலம் மாவட்டத்திலும் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது .

இதுபோன்று சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள கன்னங்குறிச்சி மற்றும் இதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இரவு பலத்த காற்றும் வீசியது.

Story image

நிவர் புயலால் வியாழக்கிழமை சேலம் அஸ்தம்பட்டியில் குடைகளை பிடித்த படி பல்வேறு பணிக்காக வியாழக்கிழமை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள்.

இதையடுத்து கன்னங்குறிச்சி அருகிலுள்ள புது ஏரி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து கீழே விழுந்தது .

சுமார் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் காற்றினால் சரிந்து விழுந்துள்ளது.

Story image

நிவர் புயலால் வியாழக்கிழமை சேலம் ஏற்காடு செல்லும் சாலையை சாரல் மழையில் மூடி மறைத்துள்ள மேகங்கள்.

காற்றில் விழுந்துள்ள நெற்பயிர்கள் பார்த்த விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம்: வே.சக்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.