நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பிச்சாட்டூர் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆற்றின் கரையோரம் வெள்ள அபாயம் உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

News image

ஆரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Updated On :26 நவம்பர் 2020, 6:50 am

DIN


திருவள்ளூர்: பிச்சாட்டூர் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆற்றின் கரையோரம் வெள்ள அபாயம் உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: ஆந்திரம் மாநிலம், பிச்சாட்டூர் ஏரியில் இருந்து 1500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது வியாழக்கிழமை தமிழக எல்லையான சுருட்டப்பள்ளி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதனால் இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பழவேற்காடு சென்றடையும். அதனால் ஆற்றின் இருபுறமும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.