ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இன்று நண்பகல் 12 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

News image
இன்று நண்பகல் 12 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை
Updated On :26 நவம்பர் 2020, 9:06 am

DIN

 
சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

நிவர் புயல் நேற்று நள்ளிரவில் புதுச்சேரிக்கு அருகே   கரையைக் கடந்த நிலையில், பலத்த காற்று வீசும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல்  மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று நிலைமை ஓரளவுக்கு சீரடைந்ததை அடுத்து, இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று நண்பகல் 12 மணி முதல், விடுமுறை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருப்பதால், மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கப்படுவது பொதுமக்களுக்கு மிகுந்த வசதியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.