சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
நிவர் புயல் நேற்று நள்ளிரவில் புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்த நிலையில், பலத்த காற்று வீசும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இதையும் படிக்கலாமே.. நிவர் புயலுக்கு இணையாக சுட்டுரையில் வீசிய மற்றொரு ஹிந்தி புயல்
இந்த நிலையில், இன்று நிலைமை ஓரளவுக்கு சீரடைந்ததை அடுத்து, இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று நண்பகல் 12 மணி முதல், விடுமுறை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருப்பதால், மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கப்படுவது பொதுமக்களுக்கு மிகுந்த வசதியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

