ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

நிவர் புயலுக்கு இணையாக சுட்டுரையில் வீசிய மற்றொரு ஹிந்தி புயல்

நிவர் புயலானது தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி, தமிழகம் - புதுச்சேரிக்கு இடையே நேற்று நள்ளிரவு கரையைக் கடந்த நிலையில், அது பற்றிய செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. 

News image

நிவர் புயலுக்கு இணையாக சுட்டுரையில் வீசிய மற்றொரு ஹிந்தி புயல்

Updated On :26 நவம்பர் 2020, 2:35 pm IST


நிவர் புயலானது தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி, தமிழகம் - புதுச்சேரிக்கு இடையே நேற்று நள்ளிரவு கரையைக் கடந்த நிலையில், அது பற்றிய செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. 

இதற்கிடையே, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சுட்டுரைப் பக்கத்தில், நிவர் புயல் தொடர்பான தகவல்கள் ஹிந்தியில் பகிரப்பட்டதால், அது மேலும் புயலைக் கிளப்பியது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் புயல் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து ஹிந்தியில் தெரிவிக்கப்பட்டு வந்தது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிவர் புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களாக தமிழகம், ஆந்திரம், புதுச்சேரி ஆகியவை கண்டறியப்பட்டன. ஒன்று தமிழ் அல்லது தெலுங்கில் பதிவுகளை இட்டிருக்கலாம். ஆனால், தென்மாநில மக்களுக்கு பயனளிக்காத ஹிந்தியில் பதிவுகளை இட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையும் படிக்கலாமே.. புயலாக வலுவிழந்தது நிவர் புயல்

ஹிந்தியில் வெளியான சுட்டுரைப் பதிவுகளுக்கு ஏராளமானோர் கடும் கண்டனங்களை கருத்துகளாக பதிவிட்டிருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருவோர், கடும் கண்டனத்தையும் பதிவிட்டனர். ஹிந்தியில்தான் எச்சரிக்கை தகவல்களை பதிவிடுவீர்கள் என்றால், தமிழகத்தின் வரிப்பணத்தை பயன்படுத்துவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர். இதனால், ஹிந்திக்கு எதிராக வழக்கமாக சுட்டுரையில் அதிகம்பேரால் பயன்படுத்தப்படும் #ஸ்டாப்ஹிந்திஇம்போசிஷன் என்ற வார்த்தை நேற்றும் சுட்டுரையில் முன்னிலைப் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.