சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி, நேற்று நள்ளிரவில் புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கத் தொடங்கிய அதிதீவிர நிவர் புயலானது, தற்போது மேலும் வலுவிழந்து புயலாக மாறியது.
கரையைக் கடந்து, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து நகர்ந்து வந்த தீவிர நிவர் புயல், புயலாக வலுவிழந்து, தொடர்ந்து வழக்கு - வடமேற்காக நகர்ந்து வருகிறது.
இது புதுச்சேரியிலிருந்து 85 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 95 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னர் அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. நிவர் புயலுக்கு இணையாக சுட்டுரையில் வீசிய மற்றொரு ஹிந்தி புயல்
நிவர் புயல் காரணமாக ராணிப்பேட்டையின் சோளிங்கரில் காலை 7 மணி முதல் 11 மணி வரை 8.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்குப் பகுதியில் அதிதீவிரப் புயலாக மாறி 16 கி.மீ. வேகத்தில் நேற்று நள்ளிரவு 11 மணிக்கு கரையை கடந்தது. அதி தீவிர நிவர் புயல் கரையை கடக்கும்போது புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் அதிகனமழை பெய்தது.
அதிகாலை 3.30 மணியளவில் புயல் முழுவதுமாக கரையை கடந்தது. அப்போது 120 முதல் 140 கி.மீ. வரை காற்று வீசியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செய்யூா் அரசுக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு

மாணவிகள் கடின உழைப்புடன் கல்வி பயின்று சாதனை புரிய வேண்டும்: மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்

சாா் பதிவாளா் அலுவலகங்களில் ரூ.90,000 பறிமுதல்

அண்ணாமலையை வைத்து தமிழகத்தில் வெற்றி பெற பாஜக திட்டம்: கிறிஸ்டோபா் திலக்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



