சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்! ஏராளமானோர் கைது!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுவது பற்றி...

News image

சென்னையில் மாணவர்கள் கைது... - DIN

Updated On :22 ஜூலை 2026, 12:46 pm IST

தில்லியில் சிஜேபி கட்சியினரின் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடத்திய மாணவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தில்லியில் இளைஞர்களின் போராட்டத்திற்கு பலரும் ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றனர்

இந்நிலையில் தில்லி போராட்டத்திற்கு ஆதரவாக இன்று தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் எஸ்எப்ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில்....

சென்னையில்....

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தில்லியில் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் ....

சென்னையில் ....

அதேபோல கோவையிலும் போராட்டம் நடத்திய மாணவர்களை குண்டுக்கட்டாக இழுத்துச் சென்று போலீசார் கைது செய்தனர். கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கிய சிறிது நேரத்தில் எஸ்எப்ஐ மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் ...

சென்னையில் ...

மேலும் மத்திய அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைதாகினர்.

சென்னையில் ...

சென்னையில் ...

தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாணவர்களின் போராட்டம் தமிழகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

NEET Exam: Protests across Tamil Nadu: Students arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.