சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஜூலை 20 போராட்டம் டிரைலர்தான்; எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால்...! சிஜேபி எச்சரிக்கை

தில்லியில் சிஜேபி கட்சியினர் இளைஞர்களின் தொடர் போராட்டம் பற்றி...

News image

தில்லியில் இளைஞர்கள் போராட்டம் ... - ENS

Updated On :22 ஜூலை 2026, 11:00 am IST

தில்லியில் ஜூலை 20-ஆம் தேதி நடந்த போராட்டம் ஒரு டிரைலர்தான் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா தெரிவித்துள்ளார்.

நீட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின் இதுதான் மிகப்பெரிய இயக்கம். கடந்த ஜூலை 20-ஆம் தேதி தில்லியில் நடந்த போராட்டம் ஒரு டிரைலர்தான். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் இன்னும் லட்சக்கணக்கானோர் தில்லிக்கு வருவார்கள். இந்த முறை நாங்கள் பின்வாங்கவோ, அமைதியாக இருக்கவோ மாட்டோம். அரசு தனது போக்கைச் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் இளைஞர்கள் இந்த அரசை வீழ்த்திவிடுவார்கள். நாங்கள் அமைதியாகவே போராட்டம் நடத்துகிறோம். கடந்த 20 ஆம் தேதியும் அமைதியான முறையிலேயே பேரணியில் ஈடுபட்டோம். ஆனால் காவல்துறை வன்முறையைக் கையாண்டது, அந்த இடங்களில் மட்டுமே குழப்பம் ஏற்பட்டது. காந்தி, அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றுவதால்தான் இளைஞர்கள் இங்கு 31 நாள்களாக அமைதியாக இருக்கிறோம்.

எங்களது கோரிக்கைகள் குறித்து குறித்து கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே பேசியுள்ளார். எந்தவொரு இளைஞர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அது உறுதி செய்யப்படாமல் இந்தப் போராட்டம் முடிவுக்கு வராது. எங்கள் குழுவின் தலைமையை பொறுத்தவரை, நாங்கள் எந்த வழக்குப்பதிவுக்கும் அஞ்சவில்லை; சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட தயாராக இருக்கிறோம். எங்கள் போராட்டத்திற்காகச் சிறைக்குச் செல்வது ஒரு சிறிய தியாகமே. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, ஏன் பாஜகவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஏனெனில் இது ஒரு மிகப்பெரிய இயக்கம். எங்கள் கோரிக்கை நியாயமானது. இந்த போராட்டத்திற்கு அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்.

Summary

If govt doesnt agree, millions more will come to Delhi: CJP Ashutosh Ranka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.