விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக 100 கனஅடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் இன்று திறந்து வைத்தார்.

News image
மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
Updated On :29 நவம்பர் 2020, 1:15 pm

DIN

பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக 100 கனஅடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் இன்று திறந்து வைத்தார்.

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக 100 கனஅடி தண்ணீரை தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் திறந்து வைத்தார். மேலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும் என்றார். 

பழைய பாசன பகுதிகளுக்கு 60 கனஅடி தண்ணீரும், புதிய பாசன பகுதிகளுக்கு 40 கனஅடி தண்ணீர் என மொத்தம் 100 கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 3,148 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2,111 ஏக்கர் என மொத்தம்  5259 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. 

பழைய பாசன பகுதிகளுக்கு நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை 17 நாட்களுக்கு 60 கனஅடி தண்ணீரும், டிசம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை 47 நாட்களுக்கு 50 கனஅடி தண்ணீரும், ஜனவரி 1 ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை 43 நாட்களுக்கு 45 கனஅடி தண்ணீரும் 107 நாள்களுக்குத் திறந்து விடப்படுகிறது.

மேலும், புதிய பாசன பகுதிகளுக்கு நவம்பர் 29ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை 2 நாள்களுக்கு 40 கனஅடி தண்ணீரும், டிசம்பர் 1 ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை 90 நாள்களுக்கு 30 கனஅடி தண்ணீரும், மார்ச் 1 ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை 15 நாட்களுக்கு 20 கனஅடி தண்ணீர் என 107 நாள்களுக்கு பழைய மற்றும் புதிய பாசனத்திற்கு 724 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் இன்றைய நிலவரம்

அணையின் உயரம் - 57 அடி, நீர்மட்டம் - 55 அடி, நீர்வரத்து - 46 க.அடி, நீர் வெளியேற்றம் 100 க.அடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.