காந்தி, காமராஜருக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் மற்றும் காமராஜரின் நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.


மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் மற்றும் காமராஜரின் நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனத சுட்டுரையில், அக்டோபர் 2 - உலக உத்தமர் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள்!
அடிமை இந்தியாவில் சுதந்திரக் காற்றை வீசச் செய்த தேசத் தந்தை!
அவர் காண விரும்பிய சமத்துவ சமூகம் - சமூக நல்லிணக்க சமுதாயம் - அனைவருக்குமான நாடு ஆகியவற்றை அமைக்கப் போராடுவோம்!
கிராமங்களே இந்தியாவின் இதயம் என்றார். கிராமம் காக்க, வேளாண்மை செழிக்க, விவசாயி வாழ நம்மை நாமே அர்ப்பணிப்போம்!
வாழ்க எம்மான்!
அதேபோல், அக்டோபர் 2 - கர்ம வீரர், கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள்!
தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவும், தமிழகம் உரிமையோடு திகழவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தனிப்பெரும் தலைவர் அவர்.
ஏழைகள் ஏற்றம் பெறவும் - எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கவும் - உலகில் தமிழன் உயர்ந்து நிற்கவும் - பெருந்தலைவர் விரும்பினார்.
அவர் விருப்பத்தை நம் கடமையாகக் கொண்டு உழைப்போம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...