அதில், “வேளாண்மை” தொடர்பான சட்டங்களை நிறைவேற்றும் முழு அதிகாரமும் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. அதே போல் “நிலம் - நிலம் சார்ந்த சுவாதீன உடன்படிக்கை” ஆகியவை மாநிலப் பட்டியல் 18-ல் இருக்கிறது. இவை தவிர, மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் 46, 47, 48 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகவும், ஒன்றோடு ஒன்று இணைத்தும் படித்துப் பார்த்தால் - வேளாண்மையைப் பொறுத்தமட்டில், சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே இருக்கிறது. ஆகவே இந்த அதிகாரத்திற்குள் நுழைந்து மத்திய அரசு சட்டமியற்றியிருப்பதை நாம் வெறுமனே வேடிக்கை பார்க்கவும் முடியாது; ஏற்றுக் கொள்ளவும் இயலாது.