தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆம்பூர் அருகே அரசு மருத்துவமனைக்கு வந்த 10 அடி நீள மலைப்பாம்பு 

ஆம்பூர் அருகே உள்ள நரியம்பட்டில் அரசினர் சமுதாய சுகாதார மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையைச் சுற்றி அடர்ந்த செடி கொடிகள் படர்ந்து புதர்போல மண்டி உள்ளது.

News image
ஆம்பூர் அருகே அரசு மருத்துவமனையில் பிடிப்பட்ட 10 அடி நீள மலைப்பாம்பு ‌
Updated On :7 அக்டோபர் 2020, 5:58 am

DIN

ஆம்பூர் அருகே உள்ள நரியம்பட்டில் அரசினர் சமுதாய சுகாதார மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையைச் சுற்றி அடர்ந்த செடி கொடிகள் படர்ந்து புதர்போல மண்டி உள்ளது. இந்த மருத்துவமனைக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் பிரசவம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு சுமார் பத்து மணிக்கு மருத்துவமனையில் பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை மருத்துவமனைக்கு வந்த ஊழியர்கள் சிலர் பார்த்துள்ளனர். அவர்கள் உடனடியாக உமராபாத் காவல் நிலையத்திற்கும் ஆம்பூர் வனசரகர் மூர்த்திக்கும் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வனக் காப்பாளர்கள் ராஜ்குமார் சுல்தான் உள்ளிட்டோர் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் சேர்ந்து நீண்ட நேரம் போராடி அந்த 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனர்.

பின்னர் பிடிப்பட்ட அந்த மலைப்பாம்பை சின்னவரிக்கம் ஊராட்சி பெங்களமூலை வனப்பகுதியில் விட்டனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் மலைப்பாம்புகள் பிடிபடுவது அதிகரித்து வந்துள்ளது.

எனவே நரியம்பட்டு அரசினர் சமுதாய சுகாதார வளாகம் மற்றும் மருத்துவ மனையைச் சுற்றியுள்ள பகுதிகளில்  செடிகொடிகள் மற்றும் புதர்களை அகற்றி சுகாதார வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.