ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காரைக்குடி அருகே வரும் தேசிய நெடுஞ்சாலை: கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்

காரைக்குடி அருகே பாதரக்குடி கிராமம் வரும் தேசிய நெடுஞ்சாலையால் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். 

News image
காரைக்குடி அருகே வரும் தேசிய நெடுஞ்சாலை: கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
Updated On :18 அக்டோபர் 2020, 8:34 am

DIN

காரைக்குடி அருகே பாதரக்குடி கிராமம் வரும் தேசிய நெடுஞ்சாலையால் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடி செல்லும் வழியில் அமைந்துள்ளது பாதரக்குடி கிராமம். இக்கிராமத்திற்குள் வீடுகள், கண்மாய் போன்றவை பாதிக்கின்ற வகையில் அமைக்கப்படும் காரைக்குடி - மேலூர் தேசிய நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 383 யை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை பாதரக்குடி கிராமப் பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Story image

அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை கிராமப் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏற்றி பாதரக்குடி பேருந்து நிறுத்தம் அருகே கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.       

இதற்கு ஆதரவாக திமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சிறப்புரையாற்றினார். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.