புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேர் கைது

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்குகள் தொடர்பாக மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

டிஎன்பிஎஸ்சி

Updated On :18 அக்டோபர் 2020, 6:38 am

DIN

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்குகள் தொடர்பாக மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ, விஏஓ தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 20 பேரைக் கைதான நிலையில், கடந்த 2017-இல் நடைபெற்ற குரூப் 2 ஏ தோ்வு முறைகேடு தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டனர். 

தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்னதாக டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு தொடர்பாக 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.