ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வேதாரண்யம் வேதாமிர்த ஏரிக்குள் கோவில் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பூமி பூஜை

நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் தூர்வாரும் பணி நடைபெற்று வரும் நிலையில், மையப் பகுதியில் கோவில் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

News image

கோவில் கட்டும் பணிக்காக நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர் ஓ.எஸ். மணியன்.

Updated On :21 அக்டோபர் 2020, 8:52 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் தூர்வாரும் பணி நடைபெற்று வரும் நிலையில், மையப் பகுதியில் கோவில் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

வேதாரண்யம் வேதாமிர்த ஏரி பல்வேறு சிறப்பு பெற்றவை. 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி பல ஆண்டுகளுக்கு பிறகு ரூ.6 கோடியே 50 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

Story image

இந்த நிலையில் ஏரியின் கீழ் கரையில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு எதிரே ஏரியின் மையப் பகுதியில் சிறிய அளவில் கோவில் கட்டப்படவுள்ளது.

அதற்கான பணியை பூமி பூஜை செய்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.