தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கரோனா அச்சம்: ராசிபுரம் அருகே கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் தற்கொலை

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிராம நிர்வாக அலுவலக பெண் உதவியாளர் கரோனா அச்சம் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News image
கரோனா அச்சம் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலக பெண் உதவியாளர் ஷகிலா
Updated On :23 அக்டோபர் 2020, 8:18 am

DIN

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிராம நிர்வாக அலுவலக பெண் உதவியாளர் கரோனா அச்சம் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ராசிபுரம்  மின்வாரிய குடியிருப்புபி பகுதியில் குடியிருப்பவர் ஷாஜகான். இவரது மனைவி ஷகிலா (52) கட்டனாச்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக இருந்து வந்தார். இவர்களுக்கு ஷாஜினி என்ற மகளும், சாகுல் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், ஷாஜகானுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கரோனா நோயாக இருக்கும் என்பதால், தனது அம்மாவை அழைத்துக்கொண்டு காட்டுப்புத்தூரில் உள்ள தங்களது  வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனிடையே ஷகிலாவிற்கும் வியாழக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மகன் சாகுல், ஷகிலாவை அழைத்துக்கொண்டு அத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்றுவிட்டு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். ஆனால், ஷகிலா கரோனா நோயாக இருக்குமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார்.

சிறிது நேரத்தில் கழுத்தில் இருந்து நகைகளை வீட்டில் கழற்றிவைத்து விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த ஷாகுல் இரவு ராசிபுரம் காவல் நிலையத்தில் தாயைக் காணவில்லை என புகார் கொடுத்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை  கட்டனாச்சம்பட்டி சுந்தரராஜன் என்பவரின் விவசாயத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் பெண்ணின் சடலம் மிதப்பதாக தகவல் தெரியவந்தது. உயிரிழந்த நிலையில், கிடந்த சடலம் கிராம் நிர்வாக அலுவலர் உதவியாளர் ஷகிலா என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராசிபுரம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.