மேட்டூர் அணை நீர்மட்டம் 100.70 அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 100.70 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 65.75 டி.எம்.சி.யாக உள்ளது.


சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 100.70 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 65.75 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று 15,124 கன அடியாகவிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 14,210 கன அடியாகக் குறைந்துள்ளது.
அதேவேளையில், அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தாலும், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...