போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மேட்டூர் அணை நீர்மட்டம் 100.70 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 100.70 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 65.75 டி.எம்.சி.யாக உள்ளது.

News image

மேட்டூர் அணை நீர்மட்டம் 100.70 அடியாக உயர்வு

Updated On :27 அக்டோபர் 2020, 3:11 am

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 100.70 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 65.75 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று 15,124 கன அடியாகவிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 14,210 கன அடியாகக் குறைந்துள்ளது.  

அதேவேளையில், அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 9,000 கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தாலும், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.