மேட்டூர் அணை நீர்மட்டம் 100.78 அடியாக உயர்வு
அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரை விட, வரத்து அதிகமாக இருப்பதால், இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 100.78 அடியாக உயர்ந்தது.


சேலம்: அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரை விட, வரத்து அதிகமாக இருப்பதால், இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 100.78 அடியாக உயர்ந்தது.
காவிரியிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,210 கன அடியிலிருந்து 11,258 கன அடியாக சரிந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 800 கன அடியிலிருந்து 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 65.85 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...