ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தொடர் விடுமுறை: நவ.2-இல் காலை 5.30 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள், தங்கள் பகுதிகளுக்குச் செல்ல ஏதுவாக நவம்பர் 2-ஆம் தேதி காலை 5.30 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
தொடர் விடுமுறை: நவ.2-இல் காலை 5.30 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை
Updated On :31 அக்டோபர் 2020, 9:49 am

DIN

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள், தங்கள் பகுதிகளுக்குச் செல்ல ஏதுவாக நவம்பர் 2-ஆம் தேதி காலை 5.30 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தில் தளா்வளிக்கப்பட்டதையடுத்து, மெட்ரோ ரயில்கள் காலை 7 முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. தொடர் விடுமுறையையொட்டி, வியாழக்கிழமை (அக்.29) அன்று மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

அதே போல், விடுமுறை முடிந்து திரும்பி வரும் பயணிகளின் வசதிக்காக காலை 7 மணி முதல் இயக்கப்படும் மெட்ரோ ரயில், நவம்பர் 2-ஆம் தேதி காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.