சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

10 நிமிடம் பானையின் மீது நின்று இரட்டைக் கம்பு சுழற்றி குழந்தை அசத்தல்!

தேசிய அளவில் ஆன்லைன் வழியாக நடைபெற்ற சிலம்பம் சுற்றும் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

News image

10 நிமிடம் பானையின் மீது நின்று இரட்டைக் கம்பு சுழற்றி குழந்தை அசத்தல்!

Updated On :6 செப்டம்பர் 2020, 9:21 am

DIN

தேசிய அளவில் ஆன்லைன் வழியாக நடைபெற்ற சிலம்பம் சுற்றும் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கரோனா தொற்று  காரணமாக சிசா ( SISA) ஸ்போர்ட் சார்பாக தேசிய அளவில் ஆன்லைன் வழியாக ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பம் சுற்றும் போட்டி நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த நேதாஜி சிலம்பம் அகாடமி சார்பாக 3 வயது குழந்தை முதல் குடும்ப பெண்கள் வரை  75 பேர்  பங்கேற்றனர்.

இதில் ஒரு பெண் குழந்தை பானை மீது 10 நிமிடம் நின்று இரட்டைக் கம்பு சிலம்பம்  சுற்றி  சாதனை நிகழ்த்தியது. ஒரு நிமிடத்தில் வேகமாக அதிக அளவு சிலம்பம் சுற்றும் மாணவ, மாணவிகளுக்கு  பதக்கங்கள் வழங்கப்படும் எனவும்,   போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.