தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இணையவழி வகுப்புக்கான அட்டவணையை சமர்ப்பிக்க ஆணை

இணையவழி வகுப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

News image

கோப்புப் படம்

Updated On :6 செப்டம்பர் 2020, 6:55 am

DIN

இணையவழி வகுப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்கள் இணைய வழியில் மாணவர்களுக்கு எடுக்கப்பட்டு வருகிறது. 

அனைத்து விதமான பள்ளிகளிலும் இணைய வகுப்புகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மன உளைச்சலால் மாணவர்களின் தற்கொலை அதிகரிப்பதால் பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் குறித்த அட்டவணையை சமர்ப்பிக்க பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில், இணையவழியில் ஒவ்வொரு வகுப்புக்கான அட்டவணை, ஆசிரியர்கள் எடுத்த வகுப்பு விவரங்களை பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். இணையவழி வகுப்பு விவரங்களை முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்பு வழிகாட்டுதலை பள்ளிகள் பின்பற்றுவதை முதன்மை கல்வி அலுவலர் கண்காணிக்க வேண்டும். இணையவழி வகுப்புகள் குறித்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் புகார்கள் இருந்தால்  grievencesredressaltnpta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.