விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கண்தானம் செய்ய முதல்வர் பழனிசாமி உறுதிமொழி: தமிழிசை பாராட்டு

கண் தானம் செய்வதாகக் கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image
தமிழிசை சௌந்தரராஜன்
Updated On :8 செப்டம்பர் 2020, 8:59 am

DIN


சென்னை: கண் தானம் செய்வதாகக் கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
கண் தானத்தை ஊக்குவிக்கும் வண்ணம் எனது கண்களை தானம் செய்ய உள்ளேன் ” என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் கண் தானம் செய்ய உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

முதலமைச்சரின் இச்செயலால் பொது மக்களும் தானாக முன்வந்து தங்களது கண்களை தானம் செய்வர். இதனால் லட்ச கணக்கான பார்வையில்லாதவர்கள் பயன் பெறுவர்.

கண் தானம் செய்வதால் வெளிச்சம் இல்லாதவர்களின் வாழ்க்கையில் நாம் ஒளி ஏற்றலாம். எனவே அனைவரும் கண் தானம் செய்ய முன் வர வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.