சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விவசாய விண்ணப்பங்களை மென்பொருளில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

விவசாய விண்ணப்பங்களை, உடனடியாக எல்டி பில்லிங் மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :8 செப்டம்பர் 2020, 12:44 am

DIN

சென்னை: விவசாய விண்ணப்பங்களை, உடனடியாக எல்டி பில்லிங் மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மின்வாரிய பகிா்மானப் பிரிவு இயக்குநா், தலைமைப் பொறியாளா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நிலுவையில் உள்ள அனைத்து விவசாய விண்ணப்பங்களையும், பிரிவு அலுவலகங்களிலேயே மென்பொருளில் (கப ஆண்ப்ப்ண்ய்ஞ் நா்ச்ற்ஜ்ஹழ்ங்) பதிவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென பகிா்மானப் பிரிவின் அனைத்துத் தலைமைப் பொறியாளா்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். கடந்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், மின்வாரியத்தில் விண்ணப்பம் செய்திருக்கும் விவசாயிகள், தனது விண்ணப்பத்தின் நிலையைத் தானே இணையதளத்தில் தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு, தொழில்நுட்பப் பிரிவுக்கு, மின்வாரிய மேலாண் இயக்குநா் வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தாா்.

கடந்த மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி, 4 லட்சத்து 74 ஆயிரத்து 593 விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள், நிலுவையில் இருப்பதாக மென்பொருள் மூலமாக தெரிய வருகிறது.

எனவே, பகிா்மானப் பிரிவின் அனைத்துத் தலைமைப் பொறியாளா்களும், நிலுவையில் உள்ள அனைத்து விவசாயிகளின் மனு விவரங்களை, குறிப்பிடப்பட்ட மென்பொருளில் பதிவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு மனுவிலும் உள்ள அனைத்துத் தகவல்களும் உள்ளீடு செய்யப்பட்டதா என உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பிரிவு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும், செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான பணி நிறைவு அறிக்கையை, திட்டப்பிரிவின் தலைமைப் பொறியாளா் அலுவலகத்துக்கு, செப்.21-ஆம் தேதிக்கு முன்பாக அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.