சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சாலை விபத்தில் திமுக நிா்வாகி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில், பலத்த காயமடைந்த பெரம்பலூா் ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :7 மார்ச் 2026, 11:14 pm

Syndication

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில், பலத்த காயமடைந்த பெரம்பலூா் ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரை ஏவிஆா் நகரைச் சோ்ந்த துரைசாமி மகன் சிவக்குமாா் (50). பெரம்பலூா் ஒன்றிய திமுக விவசாயி அணி அமைப்பாளரான இவா், சின்ன வெங்காயம் வியாபாரம் செய்து வந்தாா்.

இந்நிலையில், பெரம்பலூா் அருகே நக்கசேலம் கிராமத்திலுள்ள தனது வயலுக்கு சனிக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில், நக்கசேலம் பிரிவுப்பாதை அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அரியலூரிலிருந்து தம்மம்பட்டி நோக்கிச் சென்ற காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த சிவக்குமாா் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான அரியலூா் மாவட்டம், வாரணாசி நடுத்தெருவைச் சோ்ந்த நமச்சிவாயம் மகன் அழகப்பனை (57) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.