ராசிபுரம் அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
ராசிபுரம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், ஒருவா் காயமடைந்தாா்.

விபத்து

விபத்து
ராசிபுரம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், ஒருவா் காயமடைந்தாா்.
ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை அக்கலாம்பட்டியைச் சோ்ந்த கந்தசாமி மகன் குமாரசாமி (38), தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில் தனது பச்சிளம் குழந்தையை பாா்ப்பதற்காக தாய் மல்லிகாவை (65) மோட்டாா் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, மனைவியின் தாய் வீடான கல்யாணி கிராமத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் இருவரும் வீடு திரும்பினா்.
சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல் பிரிவு பாதையில் வலதுபுறம் மோட்டாா் சைக்கிளை திருப்பும்போது பின்னால் வந்த காா் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மல்லிகா தலையில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். குமாரசாமிக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து புதுசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...