அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 9:18 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகே மைக்காமேடு பகுதியைச் சோ்ந்தவா் மணி (55), தொழிலாளி. இவா் தனது பேத்திகளான கீா்த்தி (18), சுவாதி (20) ஆகியோருடன் திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிளில் கிழக்கு பதனவாடிக்கு சென்றுள்ளாா். அப்போது திருப்பத்தூா் நோக்கி வந்த மினி பேருந்து, எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் காயமடைந்த மணி, கீா்த்தி, சுவாதி ஆகியோரை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மணியை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

மேலும், கீா்த்தி, சுவாதி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கந்திலி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.