ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தருமபுரியில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

தருமபுரி அருகே நாளை (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு எழுதயிருந்த நிலையில் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

News image
தருமபுரி அருகே நாளை (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு எழுதயிருந்த நிலையில் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 
Updated On :12 செப்டம்பர் 2020, 3:01 pm

DIN


தருமபுரி அருகே நாளை (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு எழுதயிருந்த நிலையில் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி செவத்தாகவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் ஆதித்யா ( 20). மணிவண்ணன் டிராக்டர் விற்பனை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் ஆதித்யா இரண்டாவது முறையாக நாளை சேலத்தில் நீட் தேர்வு எழுத இருந்தார். 

இந்த நிலையில் தனது வீட்டில்  இன்று யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.