சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாகர்கோவில்: தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி பலி

நாகர்கோவிலில் தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 செப்டம்பர் 2020, 9:43 am

DIN

நாகர்கோவிலில் தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் கோட்டாறு குலாலர் தெருவை சேர்ந்த வெங்கடாசலம் மகள் அட்சயா (13) 7ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில்  சனிக்கிழமை மாலை அட்சயா தனது வீட்டு மாடியில் தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சேலை அட்சயாவின் கழுத்தை சுற்றி இறுக்கியது. இதில் அவர் மூச்சு திணறி உயிரிழந்தார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டினர் அட்சயாவின் சடலத்தை கீழே இறக்கினர். இதுகுறித்த தகவலின் பேரில் கோட்டாறு காவல்துறையினர் சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.