கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சென்னை பல்கலை.யில் தமிழ்ப் பாடவேளைக் குறைப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளுக்கான தமிழ் மொழி பாடவேளைகளின் எண்ணிக்கை வாரத்துக்கு 6 என்ற எண்ணிக்கையிலிருந்து 4-ஆக குறைக்கப்பட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.

News image
சென்னை பல்கலை.யில் தமிழ்ப் பாடவேளைக் குறைப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது
Updated On :27 ஜனவரி 2024, 5:20 pm

DIN


சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளுக்கான தமிழ் மொழி பாடவேளைகளின் எண்ணிக்கை வாரத்துக்கு 6 என்ற எண்ணிக்கையிலிருந்து 4-ஆக குறைக்கப்பட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.

பல்வேறு தரப்பில் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழ்ப் பாட வேளைக் குறைப்பு நடவடிக்கையை துணைவேந்தர் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். வழக்கம் போல 6 தமிழ்ப் பாடவேளை இடம்பெறும் எனவும் அறிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளுக்கான தமிழ் மொழி பாடவேளைகளின் எண்ணிக்கை வாரத்துக்கு 6 என்ற எண்ணிக்கையிலிருந்து 4-ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழகம், கடந்த வாரம் வெளியிட்ட 2020-21-ஆம் ஆண்டு கல்வியாண்டு இளநிலை படிப்புகளுக்கான உத்தேசப் பாடத்திட்டத்தில்தான் இந்தத் தகவல் இடம் பெற்றிருந்தது.

ஆங்கிலப் பாடத்தில் மாணவா்களின் தோ்ச்சி மிகவும் குறைவாக இருப்பதாலும், போட்டித் தோ்வுகள் மற்றும் நோ்காணல்களில் பங்கேற்கும் மாணவா்கள் ஆங்கிலம் பேச முடியாமல் தடுமாறுவதாலும் மாணவா்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்துவதற்காக கூடுதலாக ஒரு பாடவேளை ஒதுக்கப்பட இருப்பதாகவும், அதற்காக தமிழுக்கான பாடவேளைகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், தமிழ்ப் பாட வேளை குறைப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.