ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் கரோனாவுக்கு பலி

கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஆரிய வைத்திய பார்மஸியின் நிர்வாக இயக்குனருமான பி.ஆர். கிருஷ்ணகுமார் கரோனா நோய்த்தொற்றுக்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

News image

பி.ஆர். கிருஷ்ணகுமார்

Updated On :16 செப்டம்பர் 2020, 5:30 pm


கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஆரிய வைத்திய பார்மஸியின் நிர்வாக இயக்குனருமான பி.ஆர். கிருஷ்ணகுமார் கரோனா நோய்த்தொற்றுக்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் கோவை ஆரிய வைத்திய பார்மஸியின் நிர்வாக இயக்குநர் பி.ஆர். கிருஷ்ணகுமார்(69). இவருக்கு 10 நாள்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் ஷோரனூரில் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பி.வி.ராம வாரியர், பங்கஜம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த பி.ஆர்.கிருஷ்ண குமார் ஷோரனூர் ஆயுர்வேத கல்லூரியில் படிப்பை முடித்தார்.  

ஆயுர்வேத கல்வியை பரப்புவதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வந்தார். நாட்டின் சிறந்த ஆயுர்வேத நிறுவனமான கோவை ஆர்ய வைத்திய பார்மஸியின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். இவரது நிர்வாகத்தின் கீழ் ஆயுர்வேத கல்வி, மருந்து தயாரிப்பு, ஆராய்ச்சிகள் நாடெங்கும் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. 

இவரது சேவையைப் பாராட்டி இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தவிர கடந்த 2011 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் குவேம்பு பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.

நாட்டின் முதலாவது குருகுல ஆயுர்வேத கல்லூரியை நிறுவிய இவர் ஆயுர்வேதா என்ற பெயரில் ஆங்கில இதழ் நடத்தி வந்தார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்து வந்தார். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.