பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோயம்பேடு உணவு தானிய வளாகம் திறப்பு: வணிகர்கள் மகிழ்ச்சி

கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதற்கு வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

News image
கோயம்பேடு உணவு தானிய வளாகம் திறப்பு: வணிகர்கள் மகிழ்ச்சி
Updated On :18 செப்டம்பர் 2020, 10:37 am

DIN


கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதற்கு வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பொன்றில், கோயம்பேடு வணிக வளாக திறப்பிற்காக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் கோயம்பேடு கூட்டமைப்பு நிர்வாகிகளை, தமிழக அரசு நேரில் அழைத்துப் பேசி, முதலில் செப்டம்பர் 18ஆம் நாளான இன்று, உணவுதானிய வணிக வளாகத்தை முதலில் திறப்பதாகவும், செப்டம்பர் 28ஆம் தேதி காய்கறி மொத்த வணிகவளாகத்தை திறப்பதாகவும் அறிவித்தது.

அதன் அடிப்படையில் இன்று கோயம்பேடு மொத்த உணவு தானிய வணிக வளாகம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வு வணிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், மன எழுச்சியையும் தந்திருக்கிறது. 

அதே நேரத்தில் எஞ்சியிருக்கின்ற மொத்த பழ வணிக வளாகத்தையும், மலர் வணிக வளாகத்தையும், சில்லரை மொத்த காய்கறி வணிகத்தையும், திறப்பதற்கான தேதியை செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அறிவித்து, கடந்த 5 மாதங்களாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, வாழ்வாதாரம் இழந்து வறுமையில் சிக்கித் தவிக்கும் வணிகர்களன் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு அறிவிப்பு வெளியிட வேண்டுமெனவும், மேலும், மாநிலம் முழுவதும் முடக்கி வைக்கப்பட்டுள்ள குறிப்பாக திருச்சி காந்தி மார்க்கெட், கோவை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்டுகளை ஏற்கனவே இயங்கி வந்த இடங்களிலேயே மீண்டும் இயங்கிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அனைத்து வணிகர்கள் மற்றும் வணிகக் குடும்பங்களின் சார்பில் இருகரம் கூப்பி வேண்டுகிறது.

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள அத்தியவாசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து விவசாயப் விளைபொருட்களான உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் நீக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசின் தற்போதைய சட்ட நிலைபாடு பதுக்கலுக்கும், கள்ள மார்க்கெட்டிற்கும், விலைவாசி ஏற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதை எச்சரிக்கை உணர்வோடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு முன்வைக்கின்றது. இவ்வாறு பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.