விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மருத்துவக் குழுவுடன் வரும் 29-ல் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி

தளர்வுகளுடன் நான்காம் கட்ட பொது முடக்கம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி மருத்துவக் குழுவுடன் வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

News image
மருத்துவக் குழுவுடன் வரும் 29-ல் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி
Updated On :24 செப்டம்பர் 2020, 10:57 am

DIN

சென்னை: பொதுமுடக்கம் நீட்டிப்பு,  தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, தளர்வுகளுடன் கூடி நான்காம் கட்ட பொது முடக்கம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார்

தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களையும், மருத்துவக் குழுவினரையும் சந்தித்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

பொது முடக்கத்தை நீடிப்பது, மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, வரும் 29-ம் தேதி காலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தும் முதல்வர் பழனிசாமி, பிறகு மருத்துவக் குழுவினரை சந்திக்க உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.