விஜயகாந்த் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலன் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.


சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலன் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.
இது குறித்து முதல்வர் பழனிசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, இன்று காலை அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திடம், விஜயகாந்த் உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன்.
விஜயகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கரோனா அறிகுறி இருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து தேமுதிக கட்சித் தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், கழக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்த்துக்கு, லேசான கரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல் நடத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...