திங்கள்கிழமை நள்ளிரவில் பெய்த மழை காரணமாக விழுப்புரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 60 வயது பெண் பலியானார்.
விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தெற்குத் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி சரோஜா (60). கூரை வீட்டில் சரோஜா மற்றும் அவரது மகன் இளங்கோவன் (45) தனியாக வசித்து வந்தனர்.
_1.jpeg)
உயிரிழந்த மூதாட்டி சரோஜா.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக, இவர் வீட்டின் பின்புற சுவர் மழையில் இடிந்து இவர்கள் மேல் விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே சரோஜா உயிரிழந்தார். படுகாயமடைந்த இளங்கோவன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தகவலின்பேரில் ஏனாதிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ்நாராயணன் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










