சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுவையை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
சென்னை மயிலாப்பூர்,காமராசர் சாலை மற்றும் பட்டினப்பாக்கத்தில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான உணவகங்கள் அமர்ந்து சாப்பிடும் சேவையை நிறுத்தி வைத்திருக்கும் நிலையில், ஏழை, எளிய மக்களின் உணவுத் தேவையை உறுதி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்குச் சென்ற முதல்வர் பழனிசாமி, உணவு சமைக்கும் இடங்களுக்கும் நேரில் சென்று சமையல் செய்யும் முறையையும் ஆய்வு செய்தார்.

அம்மா உணவகத்தில் உணவருந்த வந்த ஏழை, எளிய மக்களிடம், உணவின் தரம் மற்றும் சுவை குறித்தும் முதல்வர் நேரடியாகவே கேட்டறிந்தார். அதோடு அம்மா உணவகத்தில் வழங்கப்பட்ட உணவை தானும் உண்டு, சுவை மற்றும் தரத்தை அறிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



