சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் அனைவரும், மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியிருக்கிறார்கள்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் பணி முடிந்ததும் வீடுகளுக்குச் செல்வதில்லை.
மாறாக, மருத்துவமனை வளாகத்திலேயே தங்கிக் கொள்கிறார்கள். தங்கள் மூலமாக குடும்பத்தினருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்காமல், மருத்துவமனையிலேயே தங்கியிருக்கிறார்கள்.