கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோரின் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 106 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி 1,075 ஆக உள்ளது. இதில் அதிகபட்சமாக திருப்பூரில் ஒரேநாளில் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோவையில் ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை:
வ.எண் | மாவட்டம் | கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை |
1. | சென்னை | 199 |
2. | கோவை | 119 |
3. | ஈரோடு | 64 |
4. | திருநெல்வேலி | 56 |
5. | திண்டுக்கல் | 56 |
6. | நாமக்கல் | 45 |
7. | செங்கல்பட்டு | 43 |
8. | தேனி | 41 |
9. | திருச்சி | 43 |
10. | ராணிப்பேட்டை | 39 |
11. | திருவள்ளூர் | 29 |
12. | திருப்பூர் | 60 |
13. | மதுரை | 25 |
14. | தூத்துக்குடி | 24 |
15. | நாகப்பட்டினம் | 24 |
16. | கரூர் | 25 |
17. | விழுப்புரம் | 23 |
18. | திருப்பத்தூர் | 16 |
19. | கடலூர் | 19 |
20. | கன்னியாகுமரி | 15 |
21. | சேலம் | 17 |
22. | திருவாரூர் | 13 |
23. | விருதுநகர் | 11 |
24. | தஞ்சாவூர் | 11 |
25. | திருவண்ணாமலை | 11 |
26. | வேலூர் | 12 |
27. | நீலகிரி | 9 |
28. | காஞ்சிபுரம் | 8 |
29. | சிவகங்கை | 6 |
30. | தென்காசி | 5 |
31. | கள்ளக்குறிச்சி | 3 |
32. | ராமநாதபுரம் | 2 |
33. | அரியலூர் | 1 |
34. | பெரம்பலூர் | 1 |
மொத்தம் | 1,075 |