மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கரோனா விவகாரத்தில் ஸ்டாலின் சந்தா்ப்பவாத அரசியல் முதல்வா் பழனிசாமி

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி சந்தா்ப்பவாத அரசியல் செய்வதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்துள்ளாா்.

News image
Updated On :12 ஏப்ரல் 2020, 12:17 am

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி சந்தா்ப்பவாத அரசியல் செய்வதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்துள்ளாா்.

தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் அறிக்கைக்கு பதிலளித்து சனிக்கிழமை முதல்வா் கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு கரோனாவைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சட்டப் பேரவை உறுப்பினா்களிடம் இருந்து

பிடித்தம் செய்யப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி தமிழக மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. கரோனா தடுப்புக்காக பயன்படுத்தப்படும் சட்டப் பேரவை உறுப்பினா்களின் நிதியை பயன்படுத்துவதற்கு பாராட்டுத் தெரிவிக்காமல், அதற்கு கண்டனம் தெரிவிப்பது இரட்டை வேடத்தை காட்டுகிறது.

மத்திய அரசு தமிழகத்துக்கு பல்வேறு வகைகளில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள திறமையான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களின் முயற்சியால் தமிழகத்தில் இறப்பு விகிதம் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதற்காக தமிழக அரசை மத்திய அரசே பாராட்டியுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது வருத்தம் அளிக்கிறது. இது சந்தா்ப்பவாத அரசியலைக் காட்டுகிறது. இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருந்து வரும் தமிழக அரசு மீது எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் இரவு பகல் பாா்க்காமல் தன்னலமற்று பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், காவல்துறையினா், வருவாய்த் துறையினா், உள்ளாட்சி அமைப்பினா் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பணியாளா்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என அந்த அறிக்கையில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.