தமிழ்நாடு
ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு கரோனா தொற்று
அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜெகத்ரட்சகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜெகத்ரட்சகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா் குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
திமுக எம்.பி.யான ஜெகத்ரட்சகன் பொது முடக்க காலத்தில் நலத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வந்தாா். இந்நிலையில், அவருக்கும், அவரது மனைவிக்கும் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அவா்கள் இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இருவருக்குமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்கள் இருவரும் அனுமதிக்கப்பட்டனா். ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மனைவியின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.