முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் ரஜினி உறுதியாக உள்ளதாக ரஜினி கட்சி மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா, கட்சி தொடங்குவாரா இல்லையா என்பதற்கு முடிவு கிடைத்துள்ளது. வரும் ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் ரஜினிகாந்த் நேற்று அறிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன்,
'முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். ஆனால், மக்கள் அவர்தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இதுவரை ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளரா இல்லையா என்பது குறித்து நான் எந்த ஊடகத்திடமும் பேசவில்லை.
ரஜினியிடமிருந்து என்னைப் பிரிக்க சதி நடக்கிறது.
ரஜினியால் மட்டுமே வெளிப்படையான ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்க முடியும். அவர் வாக்கு தவறாத மனிதர். சொன்னதைச் செய்திருக்கிறார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று 2017ல் கூறினார். அதுபடி செய்து காட்டியிருக்கிறார். மற்றபடி கட்சி தொடங்க அவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
கச்சா எண்ணெய் விலை 5% சரிவு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிஅமலாக்கத் துறையில் ஆஜர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



