கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளம்:
கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 83 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,244 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,258 பேர் சிகிச்சையில் உள்ளனர். அங்கு மொத்தம் 133 ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளன.
கர்நாடகம்:
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 204 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 6,245 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,195 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 3 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.