தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) சென்னையில் மட்டும் 1,487 பேருக்கும், பிற மாவட்டங்களில் 1,223 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று நிலவரம் பற்றி மாநில சுகாதாரத் துறை இன்று வழக்கம்போல் செய்திக் குறிப்பு வெளியிட்டது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 2,710 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,487 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 157 பேருக்கும், திருவண்ணாமலையில் 130 பேருக்கும், செங்கல்பட்டில் 126 பேருக்கும், திருவள்ளூரில் 120 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்