வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்தால் அதற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்த

News image
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
Updated On :29 ஜூன் 2020, 6:09 am

DIN


சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்தால் அதற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் அடைந்தது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதி கேட்டு தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், தந்தை - மகன் மரணம் தொடர்பாக சிபிஐக்கு மாற்றுவதாக இருந்தால் மாற்றுங்கள். அது தமிழக அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவுக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தந்தை - மகன் இறப்பு குறித்த விசாரணைக்கு காவல்துறை போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிகிறது. எனவே, தடயவியல் அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்துக்குச் சென்று ஆவணங்களை சேகரிக்க வேண்டும். 

தந்தை - மகன் மரணத்தில் உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே, நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு ஏற்றது. விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும், ஆவணங்களை சரிபார்க்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.