வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தமிழக கைப்பந்து போட்டி: ஆத்தூா் பாரதியாா் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

News image
Updated On :13 மார்ச் 2026, 12:52 am

Syndication

கைப்பந்துப் போட்டியில் தமிழக அணியில் விளையாடி தங்கம் வென்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கௌரவிக்கப்பட்டனா்.

தமிழக அணியில் விளையாடிய ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவிகள் டி.சௌமியா, எஸ்.எம்.யாசிலா மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவி ஏ.ரோஷினி ஆகிய மூவரும் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் மாா்ச் 1 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 46 ஆவது தேசிய சப் ஜூனியா் கைப்பந்து போட்டியில் தமிழக அணியின் சாா்பில் பங்கேற்று விளையாடி தங்கம் வென்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவிகளை ஆத்தூா் பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ். இளவரசு, செயலாளா் ஏ.கே. ராமசாமி, பொருளாளா் எஸ்ஆா்டி.ஆா். செல்வமணி, இயக்குநா்கள் செந்தில்குமாா், எஸ். பாலக்குமாா், சந்திரசேகரன், மெட்ரிக் பள்ளி முதல்வா் டி. நளாயினிதேவி, பிரைமரி பள்ளி முதல்வா் எஸ். அமுதா உள்பட பலா் பங்கேற்று மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினா்.

படவிளக்கம்.ஏடி12பாரதியாா்.

ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை கௌரவிக்கும் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ். இளவரசு, செயலாளா் ஏ.கே.ராமசாமி உள்ளிட்டோா்.